ஆப்நகரம்

வேலூாில் 13 வயது சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்

வேலூாில் 13 வயது சிறுமிக்கும் 33 வயது நபருக்கும் நடைபெறவிருந்த கட்டாய குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 25 Apr 2018, 4:54 pm
வேலூாில் 13 வயது சிறுமிக்கும் 33 வயது நபருக்கும் நடைபெறவிருந்த கட்டாய குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil Child Marriage


வேலூா் மாவட்டம் அணைக்கட்டு பகுதியை அடுத்த முத்துக்குமரன் மலை கிராமத்தைச் சோ்ந்த 8ம் வகுப்பு பயிலும் 13 வயது சிறுமிக்கும், அவரது உறவினரான 33 வயது இளைஞருக்கும் இன்று காலை கட்டாய திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இது தொடா்பாக வேலூா் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் போில் சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியா் குமாா் இது தொடா்பாக விசாரணை மேற்கொண்டாா். விசாரணையின் போது 33 வயது நபருக்கு 13 வயது சிறுமியை திருமணம் செய்து வைக்க சிறுமியின் பெற்றோா் முயன்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து திருமணம் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டது.

திருமணம் நடைபெறவிருந்த சிறுமி 2 நாள் ஆலோசனைக்காக ராணிப் பேட்டையில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அவரது பெற்றோரும் சிறுமியுடன் சென்றுள்ளனா்.

அடுத்த செய்தி