ஆப்நகரம்

நித்தியானந்தா ஆசிரமத்தில் குழந்தைகளுக்கு நேர்ந்த கொடுமை: சிஷ்யை வாக்குமூலம்!

திருவனந்தபுரத்தில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர் சிறுமிகளை அடைத்துவைத்து கொடுமைப்படுத்துவதாக கனடாவைச் சேர்ந்த நித்தியானந்தாவின் முன்னாள் சிஷ்யை சாரா ஸ்டீபனி லாண்ட்ரி வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 22 Sep 2019, 7:00 pm
நித்தியானந்தாவின் ஆபாச வீடியோ ஒன்று வெளியானதிலிருந்து அவர்மீது தொடர்ச்சியாக பல்வேறு புகார்களும் விமர்சனங்களும் வந்துகொண்டிருக்கின்றன. அந்தரத்தில் மிதக்கவைக்கிறேன் எனக் கூறி காமெடி செய்தது, சூரியனை நான் தான் உதிக்க சொல்கிறேன் என்று கூறியது, தனது சக்திகளைக் காட்டுகிறேன் என கிராபிக்ஸ் காட்சிகள் அடங்கிய வீடியோவை வெளியிடுவது, மேட்டூர் ஜலகண்டேஷ்வரர் கோவிலை நான்தான் கடந்த ஜென்மத்தில் கட்டினேன் என்பது, அதன் லிங்கம் தன்னிடம்தான் உள்ளது என்று சொல்வது என சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறிவருகிறார்.
Samayam Tamil Untitled collage (1)


இதனால் சமூகவலைதளங்களில் அவரை காமெடி கதாபாத்திரமாக சித்தரித்து மீம்ஸ்கள் வலம்வருகின்றன. திரைப்படங்களிலும் நித்தியானந்தாவை காமெடியாக சித்தரிக்கும் போக்கு நிலவிவருகிறது. ஆனால் கனடாவைச் சேர்ந்த சாரா வெளியிட்டுள்ள வீடியோ நித்தியானந்தா தனது ஆசிரமத்தில் சிறுவர், சிறுமிகளை கொடுமைப்படுத்திவருகிறார் என அவரது இன்னொரு முகத்தை காட்டுகிறது.

பெங்களூரில் உள்ள நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் கனடாவைச் சேர்ந்த சாரா ஸ்டீபனி லாண்ட்ரி சிஷ்யையாக சிலகாலம் இருந்துள்ளார். பின்னர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியேறிவிட்டார். அவர் அங்கு இருந்த சமயம் திருவனந்தபுரத்தில் உள்ள ஆசிரமத்தில் ரகசிய பணி ஒன்றிற்காக சென்றுள்ளார். அது குறித்து தனது வீடியோவில் சாரா கூறியுள்ளார்.

“அந்த ஆசிரமத்தில் பல சிறுவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். அவர்களுக்குச் சந்திர மந்திரத்துடன் தங்களை இணைப்பது, மூன்றாவது கண்ணைத் திறப்பதற்கான பயிற்சி, ஒருவர் உடலில் இருக்கும் நோய்களைக் கண்டுபிடிப்பது போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன.

ஒரு நாள் இரவு நான் என் அறையில் இருக்கும்போது இரண்டு சிறுவர்கள் என்னை வந்து சந்தித்தனர். என்னைப் பார்த்ததும் அவர்கள் அழத்தொடங்கிவிட்டனர். அப்போது அவர்கள்தான் என்னிடம் ‘நித்யானந்தா செய்வது அனைத்தும் பொய்" என்று கூறினர், . ``ஆசிரமத்தில் உள்ளவர்களால் நாங்கள் அடித்து துன்புறுத்தப்படுகிறோம், கழிவறைக்குச் செல்லக்கூட எங்களுக்கு அனுமதி இல்லை, நாங்கள் இரும்புக் கம்பிகள் நிறைந்த அறையில் சிறைவைக்கப்பட்டுள்ளோம்’ எனக் கூறினர். அவர்கள் கூறியதைக் கேட்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது” என்று சாரா தெரிவித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் 29 நிமிடங்கள் உள்ள அந்த வீடியோவில் சாரா நித்தியானந்தா குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை வைத்துள்ளார்.

அடுத்த செய்தி