ஆப்நகரம்

பிச்சையெடுக்காத குழந்தைகளுக்கு சூடு - போலீஸ் விசாரணை

பிச்சை எடுக்க மறுத்ததால், குழந்தைகளுக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய வடமாநில பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த பெண்ணிடம் இருந்த குழந்தைகளை மீட்டு, காப்பகங்களில் ஒப்படைத்தனர்.

TNN 18 Jun 2016, 1:31 pm
சென்னை: பிச்சை எடுக்க மறுத்ததால், குழந்தைகளுக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய வடமாநில பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த பெண்ணிடம் இருந்த குழந்தைகளை மீட்டு, காப்பகங்களில் ஒப்படைத்தனர்.
Samayam Tamil children beat by lady police arrest her
பிச்சையெடுக்காத குழந்தைகளுக்கு சூடு - போலீஸ் விசாரணை


சென்னை காசிமேடு பகுதியில் குழந்தைகளைக் கொண்டு, பெண் ஒருவர் பிச்சை எடுத்து வந்ததாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு புகார் அளித்தனர். குழந்தைகளை திட்டியும், அடித்தும் பிச்சை எடுக்க வற்புறுத்துவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

தகவலறிந்து வந்த போலீசார் அப்பெண்ணை கைது செய்தனர். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் மேற்கு வங்கத்தை சேர்ந்த ரவீனா என்பது தெரியவந்தது. அவரிடமிருந்த ஒன்றரை வயதான அர்ஜூன் மற்றும் நான்கு மாதமான சுல்தான் ஆகிய குழந்தைகளை மீட்டனர்.

குழந்தைகள் பிச்சை எடுக்க மறுத்ததால், அவர்களை கட்டையால் அடித்து, சூடு வைத்தது தெரியவந்துள்ளது. மீட்கப்பட்ட குழந்தைகள் அந்த பெண்ணின் குழந்தைகளா? அல்லது கடத்தி வரப்பட்டவர்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி