ஆப்நகரம்

அக்கா மயங்கி விழுந்ததால் தங்கைக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!

திருச்சியில் நடைபெற்ற திருமணத்தில் கடைசி நேரத்தில் மணப்பெண் மயங்கி விழுந்ததால், தங்கைக்கு தாலிகட்டி திருமணம் நடத்தப்பட்டது.

TNN 10 Mar 2017, 2:25 pm
திருச்சி: திருச்சியில் நடைபெற்ற திருமணத்தில் கடைசி நேரத்தில் மணப்பெண் மயங்கி விழுந்ததால், தங்கைக்கு தாலிகட்டி திருமணம் நடத்தப்பட்டது.
Samayam Tamil cinematic wedding held in trichy as bride committed suicide
அக்கா மயங்கி விழுந்ததால் தங்கைக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!


திருச்சிராப்பள்ளியின் துறையூர் அருகே உள்ள ஒட்டம்பட்டியை சேர்ந்தவர் பாலகுமார். இவருக்கும் சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டியை சேர்ந்த பெண்ணுக்கும் நேற்று முன்தினம் துறையூரில் உள்ள கோயில் ஒன்றில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், திருமணத்துக்கு முந்தைய நாளில் மணப்பெண் தனது அறையில் மயங்கிக் கிடந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டதும், அவர் விஷம் குடித்தது தெரிய வந்தது. தொடர்ந்து படிக்க விரும்பியதால், திருமணத்தில் விருப்பம் இல்லாமல் விஷம் குடித்திருக்கிறார் என்றும் தெரியவந்தது.

இதனால், மணமகனின் வீட்டார் மணமகளின் வீட்டார் மீது காவல்துறையில் புகார் அளித்தனர். உடனே, மணப்பெண் வீட்டார் மணமகளின் தங்கையை திருமணம் செய்துகொள்ள மாப்பிள்ளை வீட்டாரிடம் கேட்டுள்ளனர். இதற்கு, மணமகளின் தங்கையும், மாப்பிள்ளை வீட்டாரும் ஒத்துக்கொண்டதையடுத்து மணமகனுக்கும் மயங்கிய மணமகளின் தங்கைக்கும் திருமணம் நடந்திருந்திருக்கிறது. மாப்பிள்ளை வீட்டார் காவல்துறையில் கொடுத்த புகாரும் வாபஸ் பெறப்பட்டது.

சினிமாவில் நடப்பது போல நடந்து முடிந்துள்ள இந்தத் திருமணம் அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி