ஆப்நகரம்

சிப்ரோப்ளோக்சின் மாத்திரையில் கம்பி! அரசு மருத்துவமனைகளில் வழங்கத் தடை

சிப்ரோபிளாக்சிங் மாத்திரையைத் திரும்பப்பெற தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக நிர்வாக இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். அனைத்து அரசு மருத்துவமனைகளில் அந்த மாத்திரையை வழங்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 8 Jun 2019, 10:24 pm
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் சிப்ரோபிளாக்சின் மாத்திரை வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil ogko


பாக்டீரியா எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும் உதவும் வகையில் சிப்ரோபிளாக்சின் (Ciprofloxacin) மாத்திரை தமிழக அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படுகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ஏறான் துறை கிராமத்தை சேர்ந்த பாண்டி மற்றும் சக்தி ஆகியோர் வயிற்று வலி சிகிச்சைக்காக ஏர்வாடி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

அவர்களுக்கு சிப்ரோபிளாக்சின் மாத்திரை கொடுக்கப்பட்டுள்ளது. செவிலியர்கள் மாத்திரையை பாதியாக உடைத்து உட்கொள்ளுமாறு கூறியுள்ளனர். சக்தி தனக்கு கொடுக்கப்பட்ட மாத்திரையை பாதியாக உடைத்தபோது மாத்திரைக்குள் சிறிய கம்பி இருப்பதைக் கண்டுள்ளார்.


இது குறித்த செய்தி டிவி சேனல்களில் வெளியானது. இதனையடுத்து அனைத்து மாவட்ட மருந்து கிடங்குகளிலிருந்தும் சிப்ரோபிளாக்சிங் மாத்திரையைத் திரும்பப்பெற தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக நிர்வாக இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். அனைத்து அரசு மருத்துவமனைகளில் அந்த மாத்திரையை வழங்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொல்கத்தாவைச் சேர்ந்த மார்பென் லேபாரடரீஸ் (Morepen Laboratories) நிறுவனம் இந்த மாத்திரையைத் தயாரிக்கிறது. இந்நிறுவனம் இந்த மாத்திரைக்கு உள்ள தேவையைக் கருதி உற்பத்தியை இரு மடங்கு உயர்த்தியுள்ளது. ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள பயோ ஜெனடிக் டிரக்ஸ் தொழிற்சாலையில் 25 டன் மாத்திரைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

அடுத்த செய்தி