ஆர்.கே.நகரில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் இடையே திடீரென மோதல் மூண்டது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு ஏப்ரல் 12ஆம் தேதி நாள் குறிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தொகுதியில் கோடிக்கணக்கில் பணப்பட்டுவாடா நடப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
இதனிடையே, நேற்று முன்தினம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்கள் உட்பட 35 இடங்களில் வருமானவரித்துறை சோதனையிட்டு பல ஆவணங்களைக் கைப்பற்றியது.
இந்நிலையில், அதிமுக அம்மா அணியின் ஆதரவாளர்களும் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் ஆதரவாளர்களும் ஆர்.கே.நகரில திடீரென அடிபிடி சண்டையில் இறங்கினர். இரு தரப்பினருக்கும் இடையே நடத்த மோதலில் பலருக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானம் செய்து சண்டையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். Chennai: A Clash took place between O Panneerselvam & TTV Dinakaran supporters at RK Nagar. Situation now under control #RKNagarByPoll pic.twitter.com/6giYv4XySr — ANI (@ANI_news) April 9, 2017
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு ஏப்ரல் 12ஆம் தேதி நாள் குறிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தொகுதியில் கோடிக்கணக்கில் பணப்பட்டுவாடா நடப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
இதனிடையே, நேற்று முன்தினம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்கள் உட்பட 35 இடங்களில் வருமானவரித்துறை சோதனையிட்டு பல ஆவணங்களைக் கைப்பற்றியது.
இந்நிலையில், அதிமுக அம்மா அணியின் ஆதரவாளர்களும் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் ஆதரவாளர்களும் ஆர்.கே.நகரில திடீரென அடிபிடி சண்டையில் இறங்கினர். இரு தரப்பினருக்கும் இடையே நடத்த மோதலில் பலருக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானம் செய்து சண்டையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். Chennai: A Clash took place between O Panneerselvam & TTV Dinakaran supporters at RK Nagar. Situation now under control #RKNagarByPoll pic.twitter.com/6giYv4XySr — ANI (@ANI_news) April 9, 2017