ஆப்நகரம்

இரு பிரிவினரிடையே மோதல்: ராஜபாளையத்தில் பதட்டம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளதால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

TNN 30 Mar 2017, 10:58 pm
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளதால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Samayam Tamil clash between the two groups tension in rajapalayam
இரு பிரிவினரிடையே மோதல்: ராஜபாளையத்தில் பதட்டம்


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தொட்டிய பட்டியில் தண்ணீர் பிடிப்பதில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. மோதலில் ஈடுபட்டவர்கள் 10 வீடுகளுக்கு தீ வைத்துள்ளனர். மேலும், 20 வீடுகள் மற்றும் இரு சக்கர வாகனங்களை சேதப்படுத்தியுள்ளனர். இச்சம்பவத்தில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரு பிரிவினரிடையே நடைபெற்ற மோதல் காரணமாக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது.
Clash between the two groups: Tension in Rajapalayam

அடுத்த செய்தி