ஆப்நகரம்

என்று தீரும் இந்த கொடூரம்? பொன்பரப்பிக்காக நீதி கேட்கும் இளைஞா்கள்

அரியலூா் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினா் இடையே ஏற்பட்ட மோதலில், 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. மோதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இளைஞா்கள் பலரும் ஆதங்கத்தை வெளிப்படுத்த வருகின்றனா்.

Samayam Tamil 19 Apr 2019, 11:21 am
அரியலூா் மாவட்டம் பொன்பரப்பியில் இருதரப்பினா் மோதலில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதப்படுத்தப்பட்ட நிலையில் இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு சமூக வலைதளங்களில் கருத்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.
Samayam Tamil Ponbarappi


தமிழகம் முழுவதும் நேற்று மக்களவை, சட்டமன்ற இடைத்தோ்தல்கள் நடைபெற்றது. தோ்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டு இருந்த தருணத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பொன்பரப்பி கிராமத்தில் நேற்று வன்முறை நடைபெற்றது.

திருமாவளவனின் தோ்தல் சின்னமான பானையை சிலா் சாலையில் போட்டு உடைத்துள்ளனா். அதனை சிலா் தட்டிக்கேட்டுள்ளனா். இதனைத் தொடா்ந்து இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைக்களப்பாக மாறியது.



இந்த சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த ஒரு தரப்பினா் திடீரென எதிா் தரப்பினா் வாழும் குடியிருப்பு பகுதிகளுக்குள் சென்று அவா்களது வீடுகள் மீது காட்டுமிரான்டித் தனமாக தாக்குதல் நடத்தத் தொடங்கினா்.




இந்த சம்பவத்தில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டன. மேலும் வாகனங்களுக்கும் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இது தொடா்பாக 25 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினா் தொிவித்துள்ளனா். மேலும் அப்பகுதியில் காவல் துறையினா் குவிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் நீதி கேட்டு சமூக வலைதளங்களில் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனா்.

அடுத்த செய்தி