ஆப்நகரம்

கிருஷ்ணகிரி அருகே இரு தரப்பினர் இடையே மோதல்!

கிருஷ்ணகிரி அருகே இரண்டு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

Samayam Tamil 12 Dec 2018, 10:37 pm

ஹைலைட்ஸ்:

  • புகாரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
கிருஷ்ணகிரி அருகே உள்ள அவதானப்பட்டி அடுத்த நெக்குந்தி கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் சதீஸ். இவரின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் விவசாயி பாபு சதீஸ். வீட்டு சமையல் அறையில் இருந்து வரும் கழிவுநீர் பாபுவின் நிலத்தின் வழியாக செல்கிறது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனிடையே இன்று சதீஸ் தரப்புக்கும், பாபு தரப்பிற்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாபு மற்றும் சிலர், சதீஷை ஓட, ஓட விரட்டி அரிவாளால் தாக்கி உள்ளனர். இதில் படுகாயங்களுடன் தப்பியோடிய சதீஷை, அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைகாக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவரது உடலில் பல்வேறு இடங்களில் ஆழமான வெட்டுக்காயங்கள் இருந்ததால் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி கொலை முயற்சியில் ஈடுபட்ட பாபு மற்றும் சிலரை கைது செய்ய கோரி கிருஷ்ணகிரி அணை காவல்நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் அலைகழித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சதீஷின் உறவினர்கள் 100 க்கும் மேற்பட்டவர்கள் அணை காவல் நிலையம் முன்பு திரண்டனர். அப்போது வழக்குப்பதிவு செய்யாத போலீஸார் கண்டித்து காவல் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாலுக்கா இன்ஸ்பெக்டர் சீனிவாசன், மறியல் செய்தவர்கள் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார் அப்போது புகாரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

அடுத்த செய்தி