ஆப்நகரம்

புழல் சிறையில் கைதிகளுக்குள் மோதல்: ஒருவர் காயம்

புழல் சிறையில் கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலில், ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

TNN 21 Jun 2017, 9:03 pm
புழல் சிறையில் கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலில், ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.
Samayam Tamil clash erupted in puzhal prison one injured
புழல் சிறையில் கைதிகளுக்குள் மோதல்: ஒருவர் காயம்


தமிழகத்தின் மிகப்பெரிய சிறைச்சாலையில், புழல் மத்திய சிறையில் கொலைக்குற்ற கைதிகள் அடைக்கப்பட்டுள்ள பிரிவில், இன்று திடீரென சிலர் ஆக்ரோஷமாக மோதிக் கொண்டனர்.

விசாரணை கைதியான ரமேஷ் என்பவரை குறிவைத்து, மற்ற 4 கைதிகள் கடுமையாக தாக்கியதில், அவர் பலத்த காயமடைந்தார். உடனடியாக, சிறை காவலர்கள் விரைந்து வந்து ரமேஷை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், உடல்நலத்துடன் உள்ளார் எனவும் புழல் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Chennai: Clash erupted in Puzhal prison; one injured.

அடுத்த செய்தி