ஆப்நகரம்

உரிமம் இல்லாமல் டூ-வீலர் ஓட்டிய பள்ளி மாணவன் சாலை விபத்தில் உயிரிழப்பு

உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற 12ம் வகுப்பு மாணவன், சாலை விபத்தில் சிக்கி பேருந்து மீது மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 30 Jan 2019, 7:49 pm
உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற 12ம் வகுப்பு மாணவன், சாலை விபத்தில் சிக்கி பேருந்து மீது மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணவன் பேருந்துக்கு அடியில் சிக்கி பலி


இந்த சாலை விபத்தில் உயிரிழந்த மாணவனின் பெயர் அழகு சுந்தரம் என்று தெரியவந்ததுள்ளது. 18 வயது நிரம்பிய இந்த இளைஞர் சென்னை எம்.எம்.டி.ஏ காலினியை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

காலை 8 மணியளவில் அருகிலுள்ள ஏ.டி.எம் மையத்திற்கு செல்ல அழகு சுந்தரம் வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது சாலையில் தன்னூடே வந்த பேருந்தை ஓவர்டேக் செய்து முந்த முயற்சித்துள்ளார்.

இதில் அவரது வாகனம் ஸ்கிட் ஆகிவிடுவே, வாகனம் பேருந்திற்கு அடியில் சென்றுவிட்டது. இதில் பேருந்து அழகு சுந்தரம் மீது ஏறி நின்றது. இந்த விபத்தில் இளைஞர் அழகு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அண்ணா நகர் காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி