ஆப்நகரம்

8 ஆயிரம் கி.மீட்டர்..4 லட்சம் விதை பந்துகள்- 7-ம் வகுப்பு மாணவியின் பயணம்!

7வது படிக்கும் மாணவி ரக்‌ஷனா, புவி வெப்பமயமாதலை தடுக்க 4 லட்சம் விதை பந்துகளை 8 ஆயிரம் கிலோ மீட்டருக்கு தூவுவதற்கான பிரச்சார பயணம்!

Samayam Tamil 14 Jun 2019, 3:24 pm
கரூரில் 7வது படிக்கும் மாணவி ரக்‌ஷனா, புவி வெப்பமயமாதலை தடுக்க 4 லட்சம் விதை பந்துகளை 8 ஆயிரம் கிலோ மீட்டருக்கு தூவுவதற்கான பிரச்சார பயணத்தை துவக்கினார்.
Samayam Tamil 8 ஆயிரம் கி.மீட்டர்..4 லட்சம் விதை பந்துகள்- 7-ம் வகுப்பு மாணவியின் பயணம்!
8 ஆயிரம் கி.மீட்டர்..4 லட்சம் விதை பந்துகள்- 7-ம் வகுப்பு மாணவியின் பயணம்!


கரூர் அருகே உள்ள மண்மங்கலத்தை அடுத்த ராமேஸ்வரபட்டியை சேர்ந்த ரவீந்தரன்-சங்கீதா தம்பதியரின் மகள் ரக்‌ஷனா. இவர் கரூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகின்றார். இவர் சிறுவயதில் இருந்தே முட்டை மேல் நின்று கொண்டு சிலம்பம் சுற்றுவது, 80 ஆயிரம் மரகன்றுகளை தானே வளர்த்து பொதுமக்களுக்கு இலவசமாக கொடுத்தது, 10 மொழிகளில் மரம் பற்றி விழிப்புணர்வு பேசி சாதனை சாதனை புரிந்தது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கடந்த 8 ஆண்டுகளாக செய்து வருகிறார்.

இதனையடுத்து இன்று புவி வெப்பமயமாதலால் எதிர்வரும் உலக அழிவை தடுக்க லாரி மூலமாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சென்று மீண்டும் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை 8 ஆயிரம் கி.மீ 4 லட்சம் விதை பந்துகளை ஒரு கி.மீட்டருக்கு 50 விதை பந்துகள் வீதம் 8 ஆயிரம் கி.மீ தூரம் வரை தூவுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார். இதன் துவக்க நிகழ்ச்சி இன்று துவங்கியது.

மேலும் போகும் பகுதிகளில் எல்லாம் புவி வெப்பமயமாதல்,பெண் கல்வியை ஊக்குவித்தல், பறவை இனம் காத்தல், குழந்தை தொழிலாளர் முறையை தடுத்தல் உள்ளிட்ட ஆறு வகையான விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாணவி ரக்‌ஷனா மேற்கொள்ள உள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்ட நிலையில், பெரும்பாலான இடங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது. மக்கள் தங்கள் அன்றாட தேவைக்கு கூட குடிநீர் இல்லாமல் திணறி வருகின்றனர். இத்தகைய சூழலில், மாணவி ரக்‌ஷனா மேற்கொண்ட முயற்சி நம் அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது.

அடுத்த செய்தி