ஆப்நகரம்

பள்ளிகளுக்கு பறந்த அவசர உத்தரவு: மாணவர்கள் ஹேப்பி!

ஒமைக்ரான் பரவல் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

Samayam Tamil 3 Dec 2021, 4:13 pm
இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக பதிவாகி வருகிறது. தமிழ்நாட்டிலும் ஒமைக்ரான் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Samayam Tamil tn school closed


இந்நிலையில் தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளுக்கும் முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன

*பள்ளிகள், விடுதிகளில் ஆங்காங்கே இருக்கும் நீச்சல் குளங்கள் மூடப்பட வேண்டும்,
அன்வர் ராஜாவை தொடர்ந்து செல்லூர் ராஜு: ஆடியோவில் சிக்கிய மாஜி!
*தனிமனித இடைவெளி பள்ளிகளில் கட்டாயம் பின்பற்றவேண்டும்.

*முகக்கவசம் அணிவது கட்டாயம், ஆசிரியர்கள் முகக்கவசம் அணிந்து மாணவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும்.

*நாட்டுநலப் பணித் திட்டம், தேசிய மாணவர் படை செயல்பாடுகளை அனுமதிக்க கூடாது.

*இறைவணக்கம், கலாச்சார நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும்.

* 1 முதல் 8ஆம் வகுப்பு வரை சுழற்சி முறை மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
பொங்கல் பரிசு தொகுப்பு: முடிவை மாற்றியதா தமிழக அரசு?
என பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் பரவல் காரணமாக தமிழக பள்ளிக் கல்வித்துறை பிறப்பித்த முதல் உத்தரவு இதுவாகும்.

கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் செப்டம்பர் 1ஆம் தேதி தான் திறக்கப்பட்டன. 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நவம்பர் 1ஆம் தேதி திறக்கப்பட்டன. அதற்குள் ஒமைக்ரான் பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

அடுத்த செய்தி