ஆப்நகரம்

1,000 அரசுப் பள்ளிகளில் வீடியோ கான்பரன்சிங் வகுப்புகள் அறிமுகம்; அசத்தும் தமிழக அரசு!

கோவை: அரசுப் பள்ளிகளில் வீடியோ கான்பரன்சிங் வகுப்புகளை அறிமுகம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

TIMESOFINDIA.COM 23 Dec 2018, 6:43 pm
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் ரூ.8 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.
Samayam Tamil Sengottaiyan


இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் ஜனவரி இறுதிக்குள் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஸ்டூடியோ ஒன்று கொண்டு வரப்படும். அங்கிருந்து துறை சார்ந்த வல்லுநர்கள் மூலம் மாணவர்களுக்கு வீடியோ கான்பரன்சிங் முறையில் பாடம் நடத்தப்படும்.

முதல்கட்டமாக 1,000 அரசுப் பள்ளிகளில் இந்த வசதி அறிமுகம் செய்யப்படும். இதற்கான பள்ளிகளைத் தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார். 12ஆம் வகுப்பு அரையாண்டு வேதியியல் வினாத்தாள் வெளியானதாக கூறப்படும் சம்பவம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு, இரு மாணவர்கள் வினாத்தாள் அறையை உடைத்து திருட முயற்சித்தனர். ஆனால் வினாத்தாள் வெளியே கசிவதற்கு முன் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த இரு மாணவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்துவதை மாணவர்களுக்கு தண்டனையாக வழங்குவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, மாணவர்கள் யாரும் பள்ளி வளாகத்தைத் தூய்மையாக்க கட்டாயப் படுத்தப் படுவதில்லை.

தங்கள் வீட்டில் எவ்வாறு சுத்தம் செய்கின்றனரோ, அவ்வாறே பள்ளிகளிலும் செய்கின்றனர் என்றார்.

அடுத்த செய்தி