ஆப்நகரம்

கோவையில் 4 மாணவர்களுக்கு கொரோனா: வகுப்பறைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்

பொள்ளாச்சியில் நான்கு மாணவர்களை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 6 Sep 2021, 5:23 pm
தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாம் அலை கட்டுக்குள் வந்த நிலையில் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்க முடிவு செய்யப்பட்டு , செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி, 9 10 11 12 ஆகிய வகுப்புகளுக்கு முதற்கட்டமாக பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
Samayam Tamil கோப்புப்படம்


பள்ளி கல்லூரிகள் திறப்பால் பெருமளவில் இதுவரை நோய் தொற்று கண்டறியப்படவில்லை என்றாலும் சில மாணவ, மாணவிகளுக்கு ஏற்பட்டுள்ள தொற்று பாதிப்பால் சம்மந்தப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு நோய் தடுப்பு பணிகள் தீவிரபடுத்தபட்டுள்ளது‌.

இந்நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பட்டு ஏற்பட்டுள்ளது.

மூன்று முறை தற்கொலை செய்து கொண்ட ஓபிஎஸ்: நாஞ்சில் சம்பத் தகவல்!

பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புரவிபாளையம் அரசுப்பள்ளி மற்றும் பனிக்கம்பட்டி தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பள்ளி வகுப்பறைகளுக்கு சீல் வைக்கப்பட்டு வளாகத்தை சுத்தம் செய்யும் பணியை முடுக்கியுள்ளனர்.

அடுத்த செய்தி