ஆப்நகரம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் மேகக் கணினியியல் மையம்

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்கள் மற்றும் இணைப்புக் கல்லூரிகள் மேகக் கணினியத்தில் இணைக்க தமிழக அரசு ரூ.160 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

TNN 23 Aug 2016, 5:49 pm
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்கள் மற்றும் இணைப்புக் கல்லூரிகள் மேகக் கணினியத்தில் இணைக்க தமிழக அரசு ரூ.160 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
Samayam Tamil cloud computing centre to be set up at anna university
அண்ணா பல்கலைக்கழகத்தில் மேகக் கணினியியல் மையம்


அண்ணா பல்கலைக்கழகத்தில் நிறுவப்படும் இம்மையம், மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு பலவித சேவைகள் வழங்கும் வகையில் இருக்கும் எனவும், இச்செயல் திட்டம் அடுத்த 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் எனும் தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்ற பேரவையில் அறிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் திறனை மேம்படுத்த பல்வேறு மாநில, தேசிய மற்றும் உலகளாவிய கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. எனவே, அண்ணா பல்கலைக்கழகத்தில் சுமார் 5,000 பேர் அமரும் வசதி கொண்ட ஒரு பெருங் கூட்டரங்கம் ரூ. 50 கோடி செலவில் கட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், ஆராய்ச்சி மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் மோட்டார் வாகன தொழில்நுட்ப மையம் ஒன்று மோட்டார் வாகன தொழில் நிறுவனங்களுடன் இணைந்து நிறுவப்படும் என தெரிவித்துள்ளார்.

சென்னை, தருமபுரி, கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ரூ.10 லட்சம் மதிப்பில் அமைக்கப்படும் இம்மையம் பொறியியல் சார்ந்த தேர்வுகளுக்கு படிக்கும் மாணவர்களை பயிற்சி மையமாக விளங்கும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

தனியார் கல்லூரி மாணவர்களை போல் அரசு கல்லூரி மானவர்கள் வெளிநாடுகளில் சென்று மேற்படிப்பு படிக்க வாய்ப்பு கிடைக்காமல் போகிறது. ஆகையால், ஆண்டுதோறும் 10 அரசு கல்லூரிகளில் இருந்து 100 மாணவர்கள் தேர்ந்தேடுக்கப்பட்டு 15 வெளி நாடுகளுக்கு தொழிற்பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

சுமார் ரூ.8.29 கோடி செலவில் மேட்டுப்பாளையத்தில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவப்பட்டு இந்த கல்வியாண்டு முதல் இயங்கும் என தெரிவித்துள்ளார். அதேபோன்று, காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்பாக்கத்திலும் ரூ.8.48 கோடி செலவில் புதிய கல்லூரி நிறுவப்படும் என தெரிவித்துள்ளார்.

நீலகிரி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் 2 திறந்தவெளி பல்கலைக்கழகம் நிருவபப்டும். தற்போது வரை மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, தருமபுரி மாவட்டங்களில் மட்டும் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

அரசு சார்பில் 5 ஆரம்ப பள்ளியும், 3 ஆரம்பப் பள்ளிகளை நடுநிலை பள்ளிகளாகவும், 19 நடுநிலை பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் மாற்ற ஏற்பாடுகள் செய்யப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், சில பள்ளிகளில் கழிப்பறை, வகுப்பறை, சமையலறை, சுவர், மேம்படுத்தப்பட்ட வகுப்பறைகள், குடிநீர் உள்ளிட்ட மேம்பாட்டிற்காக ரூ.60.79 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், தூத்துக்குடி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 7,000 பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர்தரத்தில் எளிமையான செய்முறை பயிற்சி வழங்கப்பட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ரூ. 45 கோடி செலவில் பள்ளிகளில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கு பதிவேட்டு முறைக்கு பதிலாக பையோ மெற்றிக் முறையை கொண்டு வர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி