ஆப்நகரம்

ஆந்திராவில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்..!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 7 May 2020, 3:11 pm
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட விஷவாயு தாக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று நாடளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil ஆந்திராவில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்


ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை பெற்று வருகிறன்றனர். சம்பவம் தொடர்பாக பதிலளிக்கக்கோரி தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆந்திர அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.



இந்நிலையில், விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் பழனிசாமி இரங்கலை தெரிவித்துள்ளார். அந்த அறிவிப்பில், ஆந்திராவில் விஷவாயுவால் உயிரிழந்தவர்கள் செய்தியை கேட்டு மிகவும் வேதனையடைந்தேன். மேலும் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமாக வேண்டிக்கொள்கிறேன் என்றுள்ளார்.

அடுத்த செய்தி