ஆப்நகரம்

கனமழை பாதிப்பு, மீட்புப் பணிகள், நிவாரணம்; முதலமைச்சர் பழனிச்சாமி ஆலோசனை!

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை குறித்து, முதலமைச்சர் பழனிச்சாமி அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

TNN 3 Nov 2017, 12:23 pm
சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் கனமழை குறித்து, முதலமைச்சர் பழனிச்சாமி அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
Samayam Tamil cm edappadi k palaniswami discusses about the tamilnadu rain
கனமழை பாதிப்பு, மீட்புப் பணிகள், நிவாரணம்; முதலமைச்சர் பழனிச்சாமி ஆலோசனை!


வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. சில மணி நேர மழைக்கே, தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கி விடுகின்றன. வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால், மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தாமதமாகவே மேற்கொள்ளப்பட்டதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இன்று காலை பலத்த மழை இல்லாததால், தேங்கிய நீரை அகற்ற தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு இடைவெளிக்கு பிறகு, மீண்டும் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் முதலமைச்சர் பழனிச்சாமி, அமைச்சர் வேலுமணி, அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது மழையால் ஏற்பட்ட பாதிப்புகள், வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து விளக்கப்பட்டது. விரைவில் மீட்பு, நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CM Edappadi K. Palaniswami discusses about the Tamilnadu rain.

அடுத்த செய்தி