ஆப்நகரம்

மதுரை மாணவியின் தற்கொலைக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்..!

மதுரையில் நீட் தேர்வுக்கு பயந்து மாணவி தற்கொலை செய்துகொண்டதற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 12 Sep 2020, 5:02 pm
மதுரை மாவட்டம் ரிசர்வ் லைன் பகுதியில் ஆயுதப்படை ஆறாவது அணியின் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த முருகசுந்தரம் என்பவரின் 19 வயதான மகள் ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்துகொண்டார். விசாரணையில் அவர் நீட் தேர்வுக்கு பயந்த இந்த முடிவினை எடுத்துள்ளார் என தெரிய வந்தது.
Samayam Tamil file pic


மேலும், அவருடைய தற்கொலை கடிதமும், கடைசியாக அவர் உருக்கமாக பேசிய ஆடியோவும் அவர் தற்கொலை செய்துகொண்டதற்கு உட்சபட்ச ஆதாரமாக உள்ளது. நாளை நீட் தேர்வு தொடங்கவுள்ள நிலையில், மாணவி இன்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மாநில அளவில் அதிர்ச்சியை தந்துள்ளது. இந்நிலையில், மாணவியின் மரணத்துக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி:

மதுரை மாவட்டம், தமிழ்நாடு சிறப்பு காவல்படை வளாகத்திலுள்ள காவல் குடியிருப்பில் ஆறாம் அணியில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் திரு.முருகசுந்தரம் என்பவரது மகள் செல்வி ஜோதிஸ்ரீ துர்கா இன்று தற்கொலை செய்து கொண்டு இறந்தார் எனும் செய்தியை அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். இத்துயர சம்பவத்தில் உயிரிழந்த செல்வி.ஜோதிஸ்ரீ துர்கா அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் மாணவ செல்வங்கள் இது போன்ற விபரீத முடிவுகளை எடுப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. வாழ்வில் வெற்றி பெற எண்ணிலடங்கா வழிகள் இருக்கும் நிலையில், மாணவச் செல்வங்கள் மன உறுதியையும், விடா முயற்சியையும் வளர்த்துக் கொண்டால் வெற்றி பெறுவது நிச்சயம்.

தம்பியை நல்லா பார்த்துக்கோங்க... மதுரை மாணவியின் உருக்கமான ஆடியோ!

முக ஸ்டாலின்:

அச்சத்தினால் மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்தது அதிர்ச்சி! மாணவர்களை நிலைகுலைய வைப்பதாக இருப்பதை, அனிதா மரணம் முதல் ஜோதிஸ்ரீ துர்காவரை உணர முடிகிறது. மீண்டும் சொல்கிறேன்;தற்கொலை என்பது தீர்வல்ல; நீட் ஒரு தேர்வே அல்ல!

விஜயகாந்த்:

கடந்த சில தினங்களுக்கு முன்பு நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக, அரியலூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் நாளை நீட் தேர்வு நடைபெறும் நிலையில், தேர்வில் வெற்றி பெறுவோமா என்ற பயத்தில், மதுரை மாணவி ஜோதி துர்கா, இன்று அதிகாலை தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி கேட்டு மன வேதனை அடைந்தேன்.

தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தை முதலில் மாணவர்கள் கைவிட வேண்டும். தற்கொலை என்பது தீர்வல்ல.

அடுத்த செய்தி