ஆப்நகரம்

உதான் திட்டத்தின் கீழ் ஓசூர், நெய்வேலியில் விரைவில் வருகிறது விமான நிலையம்?

உதான் திட்டத்தின் கீழ் ஓசூர், நெய்வேலியில் விரைவில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.

Samayam Tamil 23 Jun 2018, 6:32 pm
உதான் திட்டத்தின் கீழ் ஓசூர், நெய்வேலியில் விரைவில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.
Samayam Tamil உதான் திட்டத்தின் கீழ் ஓசூர், நெய்வேலியில் விரைவில் வருகிறது விமான நிலையம்?
உதான் திட்டத்தின் கீழ் ஓசூர், நெய்வேலியில் விரைவில் வருகிறது விமான நிலையம்?


மத்திய அரசு உதான் திட்டத்தின் கீழ், வளர்ந்து வரும் நகரங்களிலும், தொழில் வளர்ச்சி உள்ள நகரங்களிலும் விமான நிலையங்களை அமைத்து வருகிறது. அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன் சேலத்தில் விமான நிலையம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தத் திட்டத்தின் கீழ் தொழில் நகரங்களான ஓசூர் மற்றும் நெய்வேலியில் விமான நிலையங்களை அமைக்கக் வேண்டுமென முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, போக்குவரத்துத் துறை மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், ஓசூரில் பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் விமான நிலையத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர, சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டுமென உத்தரவிடுமாறும் கோரிக்கை வைத்தார்.

அடுத்த செய்தி