ஆப்நகரம்

ஜெயலலிதாவுக்கு அரசியல் வாரிசு யாரும் கிடையாது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஜெயலலிதா அரசியல் வாரிசாக யாரையும் நியமிக்கவில்லை என்றும், அவர்களின் உழைப்பின் மூலம் யார் வேண்டுமானாலும் அதிமுகவில் உயர்ந்த இடத்தை அடைய முடியும் என்று முதலமைச்சர் பழனிசாமி என்று கூறியுள்ளார்.

TNN 5 Sep 2017, 12:49 pm
ஜெயலலிதா அரசியல் வாரிசாக யாரையும் நியமிக்கவில்லை என்றும், அவர்களின் உழைப்பின் மூலம் யார் வேண்டுமானாலும் அதிமுகவில் உயர்ந்த இடத்தை அடைய முடியும் என்று முதலமைச்சர் பழனிசாமி என்று கூறியுள்ளார்.
Samayam Tamil cm edappadi palanisamy speech in tiruvallur
ஜெயலலிதாவுக்கு அரசியல் வாரிசு யாரும் கிடையாது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நேற்று நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா தொடங்குவதற்கு முன்னர், மேடையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பேசிய முதல்வர் பழனிசாமி திருவள்ளூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு அதிமுக அரசு தான் காரணம். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு அரசியல் வாரிசு யாரும் இல்லை என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து பேசிய அவர், கட்சி மற்றும் பதவியில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், ஜெயலலிதா யாரையும் பார்க்காமல் இன்றி நடவடிக்கை எடுப்பார் என்று கூறியுள்ளார். பின்னர் பேசிய, ஓபிஎஸ், முதல்வரையும் தன்னையும் சில எம்.எல்.ஏக்கள் பதவி விலகுமாறு கூறி வருகின்றனர். இதற்கு காரணம், தமிழகத்தில் குடும்ப ஆட்சி வேண்டாமென்று நாங்கள் கூறியது தான் என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி