ஆப்நகரம்

எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக எதிர்கொள்ள தயார்: முதல்வர் பழனிசாமி

எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் குறித்து உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 25 Oct 2018, 12:48 pm
தமிழகத்தின் 20 தொகுதிகளிலும் எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil 084425c2-b74b-43a5-b6c1-c1743e375807.


18 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு கூறியது. இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் இறைவன் அருளால் நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன்னதாகவே, அதிமுக இடைத்தேர்தலை சந்திக்க தயாராக இருந்தது. ஆனால் அது தள்ளிவைக்கப்பட்டு விட்டது.

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும்: நீதிபதி சத்தியநாராயணன் அதிரடி உத்தரவு!
காலியாக உள்ள 20 தொகுதிகளில், எப்போது தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். தேர்தல் ஆணையம் எப்போது தேர்தல் நடத்தினாலும் அதில் போட்டியிட்டு அதிமுக வெற்றி பெறும்.


இந்த தீர்ப்பின் மூலம் டிடிவி தினகரனுக்கு அரசியலில் என்ன அனுபவம் கிடைத்திருக்கும் என்று தெரியவில்லை. ஜெயலலிதாவால் கட்சியை விட்டு நீக்கப்பட்ட அவரின் கருத்து அதிமுக-வுக்கு பொருந்தாது.

தினகரன் தரப்பு மேல்முறையீடு செய்தால், அது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும். நாடாளுமன்ற தேர்தலுக்கும், இந்த தீர்ப்புக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக அதிமுக உள்ளது. அதே நிலை வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலிலும் நீடிக்கும், என இந்த செய்தியாளர் சந்திப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அடுத்த செய்தி