ஆப்நகரம்

முக்கொம்பில் உடைந்த மதகுகளை நாளை பார்வையிடுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!!

முக்கொம்பு மேலணையில் நேற்றிரவு மதகுகள் உடைந்து விழுந்ததையடுத்து, அவற்றை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை நேரில் பார்வையிடுகிறார்.

Samayam Tamil 23 Aug 2018, 1:22 pm
திருச்சி: முக்கொம்பு மேலணையில் நேற்றிரவு மதகுகள் உடைந்து விழுந்ததையடுத்து, அவற்றை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை நேரில் பார்வையிடுகிறார்.
Samayam Tamil முக்கொம்பில் உடைந்த மதகுகளை நாளை பார்வையிடுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!!
முக்கொம்பில் உடைந்த மதகுகளை நாளை பார்வையிடுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!!


ஆங்கிலேயர் காலத்தில் முக்கொம்பில் கடந்த 1836ல் ஆண்டில் மேலணை கட்டப்பட்டது. இதில் 45 மதகுகள் உள்ளது. இந்த அணையில் காவிரி, கொள்ளிடம், கால்வாய்களில் தண்ணீர் அனுப்பப்படுகிறது. அதிகமான நீர் வரத்தால் முக்கொம்பு மேலணையில் இருந்து ஒரு லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டு வந்தது,

தண்ணீரின் அழுத்தம் அதிகரித்த நிலையில், நேற்றிரவு 8 மதகுகள் உடைப்பட்டு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மேலும், இன்று காலை ஒரு மதகு உடைந்து விழுந்தது. இதுதவிர, அணை பாலமும் உடைந்தது. இதனால், வாத்தலை பகுதி நுழைவாயில் மூடப்பட்டு, போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், முக்கொம்பில் உடைந்த 9 மதகுகளை நேரில் பார்வையிட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை திருச்சி செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, திருச்சி மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி உடைந்த மதகுகளை நேரில் ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி