ஆப்நகரம்

மாரடைப்பால் காலமான மாமனார்... சோகத்தில் மூழ்கிய எடப்பாடி பழனிசாமி

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மாமனார் காளியண்ணன் இன்று காலமனார்.

Samayam Tamil 27 Oct 2019, 6:34 pm
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மாமனார் காளியண்ணன் இன்று காலமனார்.
Samayam Tamil cm edappadi palanisamys father in law passed away
மாரடைப்பால் காலமான மாமனார்... சோகத்தில் மூழ்கிய எடப்பாடி பழனிசாமி


தமிழகத்தின் முதல்வரும் அதிமுக வின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியின் மாமனார் காளியண்னன் ஆவார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் துணைவியாரான ராதாவின் தந்தையான இவர், எடப்பாடிக்கு அருகில் உள்ள தேவூர் அம்மாபாளையத்தைச் சேர்ந்தவர்.

வயது மூப்பின் காரணமாக சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் இன்று சிகிச்சைப் பலனின்றீ உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம் சங்ககிரிக்கு அருகில் உள்ள தேவூர் அம்மாபாளையத்திலிருந்து சற்று தொலைவில் இருக்கக்கூடிய குமாரபாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இன்று மாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது தற்போது 80 என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி