ஆப்நகரம்

ஜெயலலிதா அரசு தொடர வாக்களித்தவா்களுக்கு நன்றி – முதல்வா், துணைமுதல்வா்

அதிமுகவின் அடிப்படை வாக்கு வங்கியை நிலைநாட்டி வாக்களித்திருக்கும் தமிழக வாக்காளா்களுக்கு நன்றி என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வமும், இணைஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமியும் அறிக்கை விடுத்துள்ளனா்.

Samayam Tamil 24 May 2019, 3:14 am
அதிமுகவின் அடிப்படை வாக்கு வங்கியை நிலைநாட்டி வாக்களித்திருக்கும் தமிழக வாக்காளா்களுக்கு நன்றி என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வமும், இணைஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமியும் அறிக்கை விடுத்துள்ளனா்.
Samayam Tamil EPS OPS 123


மக்களவை, இடைத்தோ்தல் முடிவுகள் வெளியான நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வமும், இணைஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமியும் விடுத்துள்ள அறிக்கையில், “ஜெயலலிதாவின் நல்லரசு தொடரவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை வாக்கு வங்கியை நிலைநாட்டியும் வாக்களித்திருக்கும் தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!

ஜனநாயகத்தின் இதயமான வணக்கத்திற்குரிய வாக்காளப் பெருமக்கள், நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலிலும், சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலிலும் தங்களது தீர்ப்பினை வழங்கி இருக்கின்றார்கள்.

ஜெயலலிதாவின் உழைப்பால் அமைந்த கழக அரசு ஆற்றி வரும் மக்கள் தொண்டு தொடரும் வண்ணம், தமிழக சட்டமன்றப் பேரவையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும்பான்மையை உறுதி செய்திருக்கும் வாக்காளப் பெருமக்களுக்கு முதற்கண் எங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், எம்.ஜி.ஆர். தந்த வெற்றிச் சின்னமாம் ``இரட்டை இலை சின்னமே தங்கள் இதயம் கவர்ந்த சின்னம் என்பதை எடுத்துக் கூறும் வகையிலும், ஜெயலலிதா கட்டிக் காத்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கி அசைக்க முடியாத இரும்புக் கோட்டை என்பதை நிலைநாட்டும் வகையிலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கழக வேட்பாளர்களுக்கும், கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள வேட்பாளர்களுக்கும் வாக்களித்திருக்கும் வாக்காளப் பெருமக்களுக்கு எங்கள் இதயமார்ந்த நன்றி உரித்தாகுக.

அகில இந்திய அளவில் பாரதிய ஜனதா கட்சியும், அதன் தோழமைக் கட்சிகளும் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றிருக்கின்றன. கடந்த 5 ஆண்டுகளாக தேச பக்தியும், மக்கள் தொண்டும் தனது இரு கண்களாகக்கொண்டு எழுச்சிமிகு நல்லாட்சியை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் உழைப்புக்குக் கிடைத்த சிறப்பான வெற்றி இது.

இந்திய வாக்காளப் பெருமக்கள் உலகமே வியந்து பாராட்டும் வண்ணம் இந்தத் தேர்தலில் பங்கேற்று ஜனநாயகத்தை வலுப்படுத்தி இருக்கின்றார்கள். நம் தேசத்தின் குடிமக்கள் அனைவருமே பாராட்டுக்கும், வணக்கத்திற்கும் உரியவர்களே.

மிழகத்தின் தேர்தல் முடிவுகள், தமிழ் நாட்டை ஆளும் தகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கே உண்டு என்பதைக் காட்டுகின்றன. இடைத் தேர்தல் நடைபெற்ற சட்டமன்றத் தொகுதிகளில், கழகத்தின் வேட்பாளர்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கின்றனர்.  வாக்காளப் பெருமக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நல்லாட்சியை தொடர்ந்து வழங்குவோம் என்று உறுதி கூறுகிறோம். இன்னும் சிறப்புடன் பணியாற்றி, அனைத்துத் தொகுதி மக்களின் அன்பையும், நல்லாதரவையும் பெறுவோம் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனா்.

அடுத்த செய்தி