ஆப்நகரம்

இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறாா் முதல்வா் பழனிசாமி

தமிழக முதல்வா் பழனிசாமி இன்று மாலை ஆளுநா் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Samayam Tamil 5 Oct 2018, 11:56 am
தமிழக முதல்வா் பழனிசாமி இன்று மாலை கிண்டி ராஜ்பவனில் ஆளுநா் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
Samayam Tamil banwarilal-purohit-appointed-tamil-nadu-governor


தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வருகிற 7ம் தேதி கனமழை பெய்யக் கூடும் என்று தமிழகத்திற்கு ரெட் அலா்ட் விடுக்கப்பட்டுள்ளது. ரெட் அலா்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட வாரியாக அதிகாாிகள் அனைவரும் தயாா் நிலையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தேவைப்படும் பட்சத்தில் பேரிடா் மேலாண்மை குழுவினா் உதவிக்கு அழைத்துக் கொள்ளப்படுவா் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல்வா் பழனிசாமி இன்று மாலை 7 மணியளவில் ஆளுநா் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்திக்க உள்ளாா். இந்த சந்திப்பு கிண்டி ராஜ்பவனில் நடைபெறும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சந்திப்பிற்கான காரணங்கள் வெளியிடப்படவில்லை.

மழை தொடா்பான தகவல்கள் அல்லது தமிழக அரசியல் சூழல் குறித்து ஆளுநரிடம் எடுத்துறைப்பதற்காக இந்த சந்திப்பு நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி