ஆப்நகரம்

நீலகிரி வெள்ளம்..உடனடி நிவாரண பணிகளுக்கு ரூ.30 கோடி ஒதுக்கீடு- முதல்வர் உத்தரவு!

நீலகிரியில் மழை வெள்ளம், நிலச்சரிவால் முழுமையாகச் சேதம் அடைந்த வீடுகளுக்கு மாற்றாக பசுமை வீடுகள் திட்டத்தில் புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

Samayam Tamil 15 Aug 2019, 5:04 pm
நீலகிரியில் மழை வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடி நிவாரண பணிகளை மேற்கொள்ள ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
Samayam Tamil நீலகிரி வெள்ளம்..உடனடி நிவாரண பணிகளுக்கு ரூ.30 கோடி ஒதுக்கீடு- முதல்வர் உத்தரவு!
நீலகிரி வெள்ளம்..உடனடி நிவாரண பணிகளுக்கு ரூ.30 கோடி ஒதுக்கீடு- முதல்வர் உத்தரவு!


நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் பலத்த மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதனை தொடர்ந்து, முதல்வர் பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:

நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளுக்கு உடனடி நிவாரணத்துக்காக மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து, ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 93 அடியாக உயர்வு!

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டு 67 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள, 6 ஆயிரத்து 910 பேருக்கு முறையாக உணவு வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உரிய மருத்துவ வசதிகள் செய்யப்பட வேண்டும்.

பகுதியாக சேதமடைந்த 1,225 குடிசைகளுக்கு தலா ரூ.4 ஆயிரத்து 100-ம், முழுமையாக சேதமடைந்த 296 குடிசைகளுக்கு தலா ரூ.5 ஆயிரமும் உடனடி நிவாரணமாக வழங்கப்படும். முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு மாற்றாக பசுமை வீடுகள் திட்டத்தில் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்.

மூன்றாக பிரியும் வேலூர் மாவட்டம்- தமிழகத்தின் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 37ஆனது!

சேதமடைந்த 153.34 கி.மீ. நீளமுள்ள சாலைகளில் போக்குவரத்து தற்காலிகமாக சீர் செய்யப்பட்ட நிலையில் அவற்றை முழுமையாக சீரமைக்கவும், சேதமடைந்த 185 சிறுபாலங்கள், 115 மின் கம்பங்கள், 3.5 கி.மீ நீளமுள்ள மின் கம்பிகள் மற்றும் 6 மின் மாற்றிகள் ஆகியவற்றை உடனடியாக மறுசீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிலச்சரிவு ஏற்பட்ட 55 இடங்களில், 31 இடங்கள் முழுவதுமாக சீரமைக்கப்பட்டு, மீண்டும் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒருவழிப்போக்குவரத்திற்கு ஏதுவாக சீரமைக்கப்பட்ட 24 சாலைகளில், இருவழிப் போக்குவரத்திற்கு ஏற்ப சீரமைக்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நேருவுக்கு ரோஜா என்றால் மோடிக்கு இதுதான் சிறப்பு...!!

சேதம் அடைந்த தோட்டக்கலை பயிர்கள் தொடர்பான கணக்கெடுப்பு பணியை வருகிற 16-ம் தேதிக்குள் முடித்து, வேளாண் பெருமக்களுக்கு இடுபொருள் மானியம் வழங்க உரிய முன்மொழிவுகளை அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். சேதமடைந்த கட்டமைப்புகளை நிரந்தரமாக சீரமைக்க தேவைப்படும் நிதி குறித்த முன்மொழிவுகளை விரைவாக மத்திய அரசுக்கு அனுப்ப, சம்பந்தப்பட்ட துறைகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி