ஆப்நகரம்

பவானிசாகர் அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பவானிசாகர் அணையில் இருந்து இன்று முதல் திறந்துவிட தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

TNN 12 Aug 2016, 12:33 am
சென்னை: விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பவானிசாகர் அணையில் இருந்து இன்று முதல் திறந்துவிட தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
Samayam Tamil cm jaya orders release water from bavani sagar dam for farming
பவானிசாகர் அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன்கோட்டை, தடப்பள்ளி வாய்க்கால்கள் மற்றும் காளிங்கராயன் வாய்க்கால் பழைய ஆயக்கட்டு நிலங்கள் ஆகியவற்றின் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன்கோட்டை, தடப்பள்ளி வாய்க்கால்கள் மற்றும் காளிங்கராயன் வாய்க்கால் பழைய ஆயக்கட்டு நிலங்கள் ஆகியவற்றின் முதல் போக பாசனத்திற்கு 12.8.2016 முதல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பிசெட்டிபாளையம், அந்தியூர் மற்றும் பவானி வட்டங்களில் அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால்கள் மூலம் 24,504 ஏக்கர் நிலங்களும், ஈரோடு வட்டத்தில் காளிங்கராயன் வாய்க்கால் மூலம் 15,743 ஏக்கர் நிலங்களும், ஆக மொத்தம் 40,247 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு தனது அறிக்கையில் முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி