கடந்த 70 நாட்களுக்கும் மேலாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டது. அதனால் மருத்துவமனையிலும், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போலோ மருத்துவர்கள், லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே அவர்களின் ஆலோசனையின்படி சிகிச்சை அளித்து வந்தனர்.
முதல்வர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிந்து தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார். இரவு 11 மணிக்கு மேல் சென்னை வந்தடைந்த அவர், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று நள்ளிரவு 12.05 மணிக்கு அப்போலோ மருத்துவமனையை சென்றடைந்தார். முதல்வரை பார்த்துவிட்டு 15 நிமிடத்தில் அங்கிருந்து ஆளுநர் புறப்படவே, அதன் பின்னர் அறிக்கை வெளியாகும் என எல்லோரும் ஆவலுடன் இருந்தனர். ஆனால் ஆளுநர் மாளிகையில் இருந்து எந்த வித அறிக்கையும் வெளியாகவில்லை.
பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிமுக தொண்டர்கள் இரவு முழுவதும் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு வந்த வண்ணம் இருந்தனர். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் முதல்வரின் உடல் நிலை கேட்டு தெரிந்து கொண்டனர். மேலும் பல்வேறு கட்சி தலைவர்களும் முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் விடியற்காலை 4 மணிக்கு மேல் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதய நாளத்தில் உள்ள அடைப்பை அறுவை சிகிச்சை இன்றி சரிசெய்யும் வகையில் செய்யப்படுவதே ஆஞ்சியோ சிகிச்சை. ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு முதல்வர் ஐசியு-விற்கு மாற்றப்பட்டார். ஐசியு-விற்கு மாற்றப்பட்ட ஜெயலலிதா அவர்கள் தற்போது மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார். ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதால் கண்காணிப்பிற்கு பிறகே அடுத்தக்கட்ட நிலை குறித்து சொல்லப்படு்ம் என்று அப்போலோ மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஏற்கனவே சிகிச்சை அளித்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் சென்னை வருகை தருகின்றனர். அவர்கள் வந்து பார்த்த பின்னர் முதல்வர் உடல் நலம் குறித்து அறிக்கை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வரின் மாரடைப்பு குறித்து செய்தி கேள்விப்பட்ட அதிமுக தொண்டர்கள் தொடர்ந்து பல்வேறு பிரார்த்தனைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
முதல்வர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிந்து தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார். இரவு 11 மணிக்கு மேல் சென்னை வந்தடைந்த அவர், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று நள்ளிரவு 12.05 மணிக்கு அப்போலோ மருத்துவமனையை சென்றடைந்தார். முதல்வரை பார்த்துவிட்டு 15 நிமிடத்தில் அங்கிருந்து ஆளுநர் புறப்படவே, அதன் பின்னர் அறிக்கை வெளியாகும் என எல்லோரும் ஆவலுடன் இருந்தனர். ஆனால் ஆளுநர் மாளிகையில் இருந்து எந்த வித அறிக்கையும் வெளியாகவில்லை.
பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிமுக தொண்டர்கள் இரவு முழுவதும் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு வந்த வண்ணம் இருந்தனர். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் முதல்வரின் உடல் நிலை கேட்டு தெரிந்து கொண்டனர். மேலும் பல்வேறு கட்சி தலைவர்களும் முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் விடியற்காலை 4 மணிக்கு மேல் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதய நாளத்தில் உள்ள அடைப்பை அறுவை சிகிச்சை இன்றி சரிசெய்யும் வகையில் செய்யப்படுவதே ஆஞ்சியோ சிகிச்சை. ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு முதல்வர் ஐசியு-விற்கு மாற்றப்பட்டார். ஐசியு-விற்கு மாற்றப்பட்ட ஜெயலலிதா அவர்கள் தற்போது மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார். ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதால் கண்காணிப்பிற்கு பிறகே அடுத்தக்கட்ட நிலை குறித்து சொல்லப்படு்ம் என்று அப்போலோ மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஏற்கனவே சிகிச்சை அளித்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் சென்னை வருகை தருகின்றனர். அவர்கள் வந்து பார்த்த பின்னர் முதல்வர் உடல் நலம் குறித்து அறிக்கை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வரின் மாரடைப்பு குறித்து செய்தி கேள்விப்பட்ட அதிமுக தொண்டர்கள் தொடர்ந்து பல்வேறு பிரார்த்தனைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.