ஓகி புயலில் சிக்க உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள உத்தரவில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு காப்பீடு ரூ.2 லட்சம் உட்பட ரூ.10 லட்சம் வழங்கப்படும்.
புயலால் தொழிலை தொடர முடியாத அளவுக்கு காயமடைந்த மீனவர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மீனவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும்.
குஜராத்தில் உள்ள மீனவர்கள் ஊர் திரும்ப படகுகளுக்கு டீசல் அளவு ரூ 1,000 லிட்டராக உயர்த்தபடும். உணவுப்படியாக மீனவர்களுக்கு தலா ரூ 2,000 வழங்கப்படும்.
கர்நாடகா, கேரளாவில் இருந்து மீனவர்களை மீட்க 750 லிட்டர் டீசல் வழங்கப்படும். மீனவர்களின் குடும்பத்தினர் தெரிந்துகொள்ள ஏதுவாக பத்திரிக்கைகள் மூலம் தகவலை தெரியபடுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஓகி புயலில் சிக்கி காயமடைந்த மீனவர்களுக்கு மறுவாழ்வு நிதியாக ரூ 5 லட்சம் வழங்கப்படும். நாட்டுப்படகு ஒன்றுக்கு 200 லிட்டர் எரி எண்ணெயை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மரணமடைந்த மீனவர்களின் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவியுடன் கல்வி நிறுவனங்களில் மூலம் பயிற்சி அளிக்கப்படும்.
கல்வி நிறுவனங்களில் மூலம் மீனவர்களின் குழந்தைகளுக்கு திறன் வளர் பயிற்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கரை சேர்ந்த மீனவர்களின் விவரங்களை தெரியப்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்து மீனவர்களையும் பத்திரமாக மீட்டு கரை சேர்க்கும் வரை மீட்பு நடவடிக்கைகளை தொடர அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
தமிழக முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள உத்தரவில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு காப்பீடு ரூ.2 லட்சம் உட்பட ரூ.10 லட்சம் வழங்கப்படும்.
புயலால் தொழிலை தொடர முடியாத அளவுக்கு காயமடைந்த மீனவர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மீனவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும்.
குஜராத்தில் உள்ள மீனவர்கள் ஊர் திரும்ப படகுகளுக்கு டீசல் அளவு ரூ 1,000 லிட்டராக உயர்த்தபடும். உணவுப்படியாக மீனவர்களுக்கு தலா ரூ 2,000 வழங்கப்படும்.
கர்நாடகா, கேரளாவில் இருந்து மீனவர்களை மீட்க 750 லிட்டர் டீசல் வழங்கப்படும். மீனவர்களின் குடும்பத்தினர் தெரிந்துகொள்ள ஏதுவாக பத்திரிக்கைகள் மூலம் தகவலை தெரியபடுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஓகி புயலில் சிக்கி காயமடைந்த மீனவர்களுக்கு மறுவாழ்வு நிதியாக ரூ 5 லட்சம் வழங்கப்படும். நாட்டுப்படகு ஒன்றுக்கு 200 லிட்டர் எரி எண்ணெயை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மரணமடைந்த மீனவர்களின் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவியுடன் கல்வி நிறுவனங்களில் மூலம் பயிற்சி அளிக்கப்படும்.
கல்வி நிறுவனங்களில் மூலம் மீனவர்களின் குழந்தைகளுக்கு திறன் வளர் பயிற்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கரை சேர்ந்த மீனவர்களின் விவரங்களை தெரியப்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்து மீனவர்களையும் பத்திரமாக மீட்டு கரை சேர்க்கும் வரை மீட்பு நடவடிக்கைகளை தொடர அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது