ஆப்நகரம்

ஓபிஎஸ் தரப்பு நிபந்தனை; மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை...!

அணிகள் இணைப்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பாக மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

TNN 21 Aug 2017, 1:19 pm
சென்னை: அணிகள் இணைப்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பாக மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
Samayam Tamil cm palanisamy discusses with senior ministers
ஓபிஎஸ் தரப்பு நிபந்தனை; மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை...!


தமிழகத்தில் அதிமுக அணிகள் இணைப்பு விவகாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக இணைப்பு சாத்தியமாவதற்கான சூழல் ஏற்பட்டு வந்த நிலையில், இன்று பரபரப்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன.

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பினர் வந்து, பேச்சுவார்த்தை நடத்தி இணைப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கினால் மட்டுமே பேச்சுவார்த்தை தொடரும் என்று ஓபிஎஸ் தரப்பு அதிரடி நிபந்தனையை தெரிவித்தது. இதனால் அணிகள் இணைப்பில் மீண்டும் சிக்கல் உருவானது.

இதுகுறித்து மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் பழனிச்சாமி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இதற்கிடையில் சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்க சில அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

இதனால் இதுதொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அணிகள் இணைவதில் தாமதம் தொடர்கிறது.

இதையடுத்து சசிகலாவை நீக்க எதிர்ப்பு தெரிவிக்கும் அமைச்சர்களை, மூத்த அமைச்சர்கள் சமாதானம் செய்து வருகின்றனர். இதற்கிடையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழகம் வந்துள்ளார்.

CM Palanisamy discusses with senior ministers.

அடுத்த செய்தி