ஆப்நகரம்

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றார் முதல்வர் பழனிச்சாமி; அணிகள் இணைப்பு குறித்து பேச்சு...!

அதிமுக தலைமை அலுவலகத்தில் அணிகள் இணைப்பு குறித்து, முதலமைச்சர் பழனிச்சாமி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

TNN 10 Aug 2017, 11:03 am
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் அணிகள் இணைப்பு குறித்து, முதலமைச்சர் பழனிச்சாமி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
Samayam Tamil cm palanisamy enters admk head office
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றார் முதல்வர் பழனிச்சாமி; அணிகள் இணைப்பு குறித்து பேச்சு...!


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின், தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஆளும் அதிமுக இரண்டாக பிளவுற்றது. ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் அணிகள் இயங்க, அவர்கள் ஒருங்கிணைப்பை காண டிடிவி தினகரன் 60 நாட்கள் கெடு விதித்தார்.

ஆனால் அது நடக்காததால், தீவிர அரசியலில் டிடிவி களமிறங்கியுள்ளார். இதற்கிடையில் பிளவுபட்ட இரு அணிகளும் இணையும் என்றும், இணையாது என்றும் மாறுபட்ட கருத்துக்களை கூறி வருகின்றனர்.

இந்நிலையில் முதலமைச்சர் பழனிச்சாமி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு இன்று காலை சென்றார். அங்கு இரு அணிகள் இணைப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு, பின்னர் கருத்து கேட்கப்படுவதாக கூறப்படுகிறது.

அணிகள் இணையும் சூழல் ஏற்படின், ஓபிஎஸ் உள்ளிட்டோருக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படும் என்றும், முதல்வராக பழனிச்சாமியே நீடிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

CM Palanisamy enters ADMK head Office.

அடுத்த செய்தி