ஆப்நகரம்

தமிழக சட்டமன்றத்தில் ராமசாமி படையாச்சியார் திரு உருவப்படம் முதல்வரால் திறப்பு

இன்று மறைந்த முன்னாள் அமைச்சர் ராமசாமி படையாச்சியாரின் உருவப்படத்தை முதல்வர் பழனிசாமி சட்டமன்றத்தில் திறந்து வைத்தார். அவரது உருவப்படத்துக்குக் கீழே வீரம், தீரம், தியாகம் என எழுதப்பட்டுள்ளது. இந்திய விடுதலைக்காகப் பாடுபட்டவர் ராமசாமி படையாச்சியார் என முதல்வர் தன் உரையில் தெரிவித்தார்.

Samayam Tamil 19 Jul 2019, 6:12 pm
மறைந்த முன்னாள் அமைச்சர் ராமசாமி படையாச்சியாரின் உருவப் படம், தமிழக சட்டப்பேர வையில் வரும் 19-ம் தேதி திறந்து வைக்கப்படும் என பேர வைத் தலைவர் பி.தனபால் அறிவித்தார். அதன்படி இன்று அவரது உருவப்படத்தை முதல்வர் பழனிசாமி சட்டமன்றத்தில் திறந்து வைத்தார். அவரது உருவப்படத்துக்குக் கீழே வீரம், தீரம், தியாகம் என எழுதப்பட்டுள்ளது.
Samayam Tamil 67931


சட்டமன்றத்தில் முன்னதாக கேள்வி நேரம் முடிந்ததும் இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட பேரவைத் தலைவர் பி.தனபால், “மறைந்த முன்னாள் அமைச்சர் ராமசாமி படையாச்சியாரின் உருவப் படத்தை சட்டப்பேரவை யில் வரும் 19-ம் தேதி மாலை 5 மணிக்கு முதல்வர் பழனிசாமி திறந்து வைக்கிறார்.

பேரவைத் தலைவர் தலைமையில் துணை முதல்வர் முன்னிலையில் நடை பெறும் இந்த விழாவில் எதிர்க் கட்சித் தலைவர், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள்’’ என்றார்.

ராமசாமி படையாச்சியாரின் உருவப்படத்தை திறந்துவைத்த பின் பேசிய முதல்வர் பழனிசாமி ’மிகவும் பிறபடுத்தப்பட்டோர் என்ற பிரிவை உருவாக்க காரணமாக இருந்தவர் ராமசாமி படையாச்சியார். இந்திய விடுதலைக்காகப் பாடுபட்டவர்’ என கூறி அவருக்கு புகழாரம் சூட்டினார். இதற்கு அனைத்து கட்சியினரும் கரகோஷம் எழுப்பினர்.

அடுத்த செய்தி