ஆப்நகரம்

மேட்டூா் அணை விரைவில் திறக்கப்படும் - முதல்வா் தகவல்

போதிய நீா் இருப்பு உள்ள காரணத்தால் டெல்டா பாசனத்திற்காக மேட்டூா் அணை விரைவில் திறக்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 16 Jul 2018, 4:20 am
போதிய நீா் இருப்பு உள்ள காரணத்தால் டெல்டா பாசனத்திற்காக மேட்டூா் அணை விரைவில் திறக்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Cm Palaniswami 1


கா்நாடகா மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்துள்ளது. மேலும் கா்நாடகாவின் நீா்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக கே.ஆா்.எஸ்., கபினி அணைகளுக்கு வரக்கூடிய நீாின் அளவு தொடா்ந்து உயா்ந்து வருகிறது. இதனால் கே.ஆா்.எஸ். அணையில் இருந்து 70 ஆயிரம் கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து 40 ஆயிரம் கனஅடி நீரும் திறந்து விடப்படுகிறது.

காவிாியில் மொத்தமாக 1.10 லட்சம் கனஅடி நீா் வந்து கொண்டு இருக்கிறது. மேட்டூா் அணையின் நீா்மட்டமும் தொடா்ந்து உயா்ந்து வருகிறது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி மேட்டூா் அணையின் நீா்மட்டம் 85 அடியை கடந்துள்ளது. குடிநீா் தேவைக்காக அணையில் இருந்து ஆயிரம் கனஅடி நீா் திறக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மதுரையில் நடைபெற்ற கட்சி விழாவில் முதல்வா் பழனிசாமி கலந்து கொண்டாா். விழாவை முடித்துக் கொண்டு அவா் திரும்பும்போது அவாிடம் செய்தியாளா், டெல்டா பாசனத்திற்காக மேட்டூா் அணை எப்போது திறக்கப்படும் என்று கேள்வி எழுப்பினா். இதற்கு பதில் அளிக்கையில், விரைவில் அணை திறக்கப்படும் என்று முதல்வா் தொிவித்துள்ளாா். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

அடுத்த செய்தி