ஆப்நகரம்

அவன் பொய் சொல்றான் ரெப்ரீ! பொய் சொல்றான்; செந்தில் பாலாஜி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினர், சசிகலா மற்றும் தினகரன் குறித்து தவறான தகவல்களை பரப்பி வருவதாக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்

TNN 25 Aug 2017, 7:41 pm
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினர், சசிகலா மற்றும் தினகரன் குறித்து தவறான தகவல்களை பரப்பி வருவதாக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்
Samayam Tamil cm palanisamy supporters tells rumour about sasikala and dinakaran
அவன் பொய் சொல்றான் ரெப்ரீ! பொய் சொல்றான்; செந்தில் பாலாஜி


தினகரன் தரப்பு எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், சசிகலா மற்றும் தினகரன் குறித்து முதல்வர் பழனிசாமியின் அணியினர் தவறான தகவல்களை பரப்பிவருவதாகவும், கட்சியை காப்பாற்றும் தினகரனின் நடவடிக்கைகளுக்கு பின்னால் நாங்கள் இருப்பதாகவும் கூறினார்.

தொடர்ந்து எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் விவகாரம் பற்றி பேசிய செந்தில் பாலாஜி, சபாநாயகரின் கடிதம் இன்னும் வரவில்லை என்றும் கடிதம் கிடைத்த பின் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்,
முன்னதாக எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் கூறுகையில், விண்ட் ப்ளவர் ரிசார்ட் அறைகள் 2 நாட்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டதால் வேறு விடுதிக்கு மாறவதாகவும் இது குறித்து புதுச்சேரி வரவிருக்கும் தினகரனுடன் ஆலோசித்து முடிவெடுக்கவுள்ளதாகவும் கூறினார்,

அடுத்த செய்தி