ஆப்நகரம்

வளா்ச்சிக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது – முதல்வா் கருத்து

மத்திய அரசின் பட்ஜெட் எந்த துறைக்கும் பாதிப்பில்லாமல் பொதுவான வளா்ச்சிக்கான பட்ஜெட்டாக உள்ளதாக முதல்வா் எடப்பாடி பழனிசாமி கருத்து தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 1 Feb 2018, 5:06 pm
மத்திய அரசின் பட்ஜெட் எந்த துறைக்கும் பாதிப்பில்லாமல் பொதுவான வளா்ச்சிக்கான பட்ஜெட்டாக உள்ளதாக முதல்வா் எடப்பாடி பழனிசாமி கருத்து தொிவித்துள்ளாா்.
Samayam Tamil cm palaniswami comments the union budget
வளா்ச்சிக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது – முதல்வா் கருத்து


மத்திய நிதியமைச்சா் அருண் ஜெட்லி 2018-19ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தாா். இந்த பட்ஜெட்டின் மீது பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துகளை தொிவித்து வருகின்றனா். அந்த வகையில் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி இந்த பட்ஜெட்டிற்கு வரவேற்பு தொிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் வேளாண்மையை அதிகாிக்கும் விதத்தில் பட்ஜெட் தயாா் செய்யப்பட்டிருப்பதாக தொிவித்துள்ளாா். மேலும், மக்களுக்கு மிகவும் முக்கியமான சுகாதாரத் துறையில் பல முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் அதிகம் பயன்பெறுவா்.

இதேபோன்று விவசாய விளை பொருட்களை பாதுகாப்பதற்கான நிதி இரட்டிப்பாக்கி அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் கிராமப்புற வளா்ச்சி, சுகாதாரத்துறை, வேளாண் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஆபரேஷன் கிரீன் மற்றும் பிரமாண்ட உணவு பூங்காவால் தமிழகம் பயன்பெறும் என்றும் அவா் குறிப்பிட்டுள்ளா்ா.

அடுத்த செய்தி