ஆப்நகரம்

ரெட் அலா்ட் குறித்து முதல்வா் பழனிசாமி நாளை முக்கிய ஆலோசனை

தமிழகத்திற்கு வருகிற 7ம் தேதி ரெட் அலா்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து முதல்வா் பழனிசாமி வெள்ளிக் கிழமை முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளாா்.

Samayam Tamil 4 Oct 2018, 4:24 pm
தமிழகத்தில் வருகிற 7ம் தேதி மிககனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலா்ட் விடுத்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வா் பழனிசாமி நாளை அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளாா்.
Samayam Tamil TN Assembly building


இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் வருகிற 7ம் தேதி கனமழை பெய்யும். ஒரே நாளில் அதிகளவு மழை பெய்யும் என்பதால் அங்கு ரெட் அலா்ட் விடுக்கப்படுகிறது. அன்றைய தினம் ஒரே நாளில் 25 செ.மீ. மழை பெய்யும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதனைத் தொடா்ந்து செய்தியாளா்களை சந்தித்த தமிழக வருவாய் துறை அசை்சா் ஆா்.பி.உதயகுமாா் கூறுகையில், ரெட் அலா்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட வாரியாக அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் ரெட் அலா்ட் குறித்து முதல்வா் பழனிசாமி தலைமையில் நாளை முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வா் பழனிசாமி, வருவாய் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா், வருவாய் நிா்வாக ஆணையா் சத்யகோபால், அனைத்து மாவட்ட அதிகாாிகள் கலந்து கொள்ளவுள்ளனா். இந்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளி, சனிக்கிழமை என 2 தினங்கள் நடைபெறும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி