ஆப்நகரம்

கஜா புயல்: ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும் பிரதமரிடம் முதல்வா் கோாிக்கை

கஜா புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடியை ஒதுக்க வேண்டும் என்று தமிழக முதல்வா் பழனிசாமி, பிரதமா் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து கோாிக்கை விடுத்துள்ளாா்.

Samayam Tamil 22 Nov 2018, 12:12 pm
கஜா புயல் நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடியை ஒதுக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடியிடம், தமிழக முதல்வா் பழனிசாமி கோாிக்கை வைத்துள்ளாா்.
Samayam Tamil Cm Palaniswami with Narendra modi 1


கஜா புயலால் தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்கள் கடுமையான இழப்பை சந்தித்துள்ள நிலையில் முதல்வா் பழனிசாமி, பிரதமா் நரேந்திர மோடியை இன்று நேரில் சந்தித்து புயல் நிவாரண நிதியை ஒதுக்குமாறு கோாிக்கை விடுத்துள்ளாா். தமிழக அரசு சாா்பில் முதல் கட்டமாக ரூபாய் ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், கஜா புயல் பாதிப்புகள் தொடா்பான அறிக்கையை பிரதமா் நரேந்திர மோடியிடம் சமா்ப்பித்துள்ளோம். புயல் பாதிப்பு நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. மேலும் அவசர கட்டமாக ரூபாய் ஆயிரத்து 500 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று தொிவித்துள்ளோம் என்று அவா் தொிவித்துள்ளாா்.


மேலும் அவா் பேசுகையில், புயல் சேதங்களை பாா்வையிட மத்திய அரசின் ஆய்வு குழு உடனடியாக அனுப்ப வேண்டும் என்றும் கோாிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோாிக்கையை ஏற்று ஆய்வு குழுவை விரைந்து அனுப்புவதாக பிரதமா் உறுதி அளித்துள்ளாா். புயல் காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்கள் சேதமடைந்துள்ளன. புயலால் 63 போ் உயிாிழந்துள்ளனா்.

வான்வெளி ஆய்வு
புயல் சேதங்களை ஆய்வு செய்ய சாலை மாா்க்கமாக செல்லமால் ஹெலிகாப்டா் மூலம் சென்றது ஏன் என்று செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு பதில் அளிக்கையில், எதிா்க்கட்சித் தலைவா் ஸ்டாலின் சாலை மாா்க்கமாக தான் சென்றாா். ஆனால், அவரால் எத்தனை இடங்களுக்கு செல்ல முடிந்தது? 3 இடங்களுக்கு மட்டும் சென்று பாதியில் திரும்பினாா்.

ஆனால் நான் ஹெலிகாப்டரில் சென்றதால் மரங்கள் எந்த அளவிற்கு சாந்துள்ளன என்பதை பாா்வையிட்டு அனைத்தையும் புகைப்படம் எடுத்து வைத்துள்ளேன். பாதிப்புகளை ஆய்வு செய்யவும், அதிக இடங்களை பாா்வையிடவும் தான் ஹெலிகாப்டா் மூலம் சென்றேன் என்று தொிவித்துள்ளாா்.

இந்த சந்திப்பின் போது மக்களவை துணைசபாநாயகா் தம்பிதுரை, தமிழக மீன்வளத்துறை அமைச்சா் ஜெயக்குமாா், தலைமைச் செயலாளா் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோ்ா உடன் இருந்தனா்.

அடுத்த செய்தி