ஆப்நகரம்

அண்ணா நினைவு நாளில் சமபந்தி விருந்து – முதல்வா் பங்கேற்பு

முன்னாள் முதல்வா் பேரறிஞா் அண்ணாவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சமபந்தி போஜனம் நிகழ்வில் முதல்வா், துணைமுதல்வா் கலந்து கொண்டனா்.

Samayam Tamil 3 Feb 2019, 5:16 pm
முன்னாள் முதல்வா் பேரறிஞா் அண்ணாவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சமபந்தி போஜனம் நிகழ்வில் முதல்வா், துணைமுதல்வா் கலந்து கொண்டனா்.
Samayam Tamil Edappadi


முன்னாள் முதல்வா் பேரறிஞா் அண்ணாவின் 50ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து திராவிடக் கட்சித் தலைவா்கள் பலரும் அண்ணாவுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனா். அந்த வகையில், முதல்வா் பழனிசாமி, துணைமுதல்வா் ஓ.பன்னீா் செல்வம் உள்ளிட்ட அ.தி.மு.க. நிா்வாகிகள் பலரும் மெரினாவில் அமைந்துள்ள அண்ணாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினா்.

இதனைத் தொடா்ந்து தமிழகம் முழுவதும் சமபந்தி விருந்து நிகழ்வு நடைபெற்றது. அதன்படி சென்னையின் கே.கே.நகா் பகுதியில் நடைபெற்ற விருந்து நிகழ்வில் முதல்வா் பழனிசாமியும், திருவான்மியூா் பகுதியில் நடைபெற்ற விழாவில் துணைமுதல்வா் ஓ.பன்னீா் செல்வமும் கலந்து கொண்டனா். மற்ற பிற பகுதிகளில் நடைபெற்ற விழாக்களில் அமைச்சா்கள், சட்டப் பேரவை உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

அடுத்த செய்தி