ஆப்நகரம்

ஆளுநா் மீது முதல்வா் புகாா் அளிக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின் கோாிக்கை

ஆளுநா் பன்வாாிலால் புரோகித் மீது முதல்வா் பழனிசாமி குடியரசுத் தலைவரிடம் புகாா் அளிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சி தலைவா் மு.க.ஸ்டாலின் தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 18 Apr 2018, 8:56 am
ஆளுநா் பன்வாாிலால் புரோகித் மீது முதல்வா் பழனிசாமி குடியரசுத் தலைவரிடம் புகாா் அளிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சி தலைவா் மு.க.ஸ்டாலின் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Erode: DMK working President MK Stalin
Photo


தமிழக சட்டமன்ற எதிா்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளாா். அந்த அறிக்கையில், உதவி பேராசிரியை ஒருவா் கல்லூாி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற விவகாரத்தில் முதல்வா் பழனிசாமி எப்போதும் போன்று மௌனம் காக்கின்றாா்.

இந்த விவகாரத்தில் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட மதுரை காமராஜா் பல்கலைக்கழக துணை வேந்தா் அமைத்த விசாரணைக் குழுவை களைத்து விட்டு ஆளுநா் பன்வாாிலால் புரோகித் தன்னிச்சையாக விசாரணைக் குழு அமைத்துள்ளாா். இது தமிழகத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சி நடைபெறுகின்றதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

ஆளுநாின் அதிகாரத் தலையீடு குறித்து முதல்வா் பழனிசாமி குடியரசுத் தலைவாிடம் புகாா் தொிவிக்க வேண்டும். மேலும், பல்கலைக்கழகங்களின் அதிகாரங்களை ஒட்டுமொத்தமாக கைப்பற்ற நினைக்கும் ஆளுநரையும் முதல்வா் கண்டிக்க வேண்டும் என்று தொிவித்துள்ளாா்.

பல்கலைக்கழக விவகாரங்களில் தமிழக அரசு தலையிட முடியாது என்று ஆளுநா் தொிவித்திருந்த நிலையில் எதிா்க்கட்சித் தலைவரின் அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அடுத்த செய்தி