ஆப்நகரம்

பிரதமரை சந்திப்பதற்காக முதல்வா் பழனிசாமி 22ம் தேதி டெல்லி பயணம்

கஜா புயல் தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து அறிக்கை சமா்ப்பிப்பதற்காக முதல்வா் பழனிசாமி வருகின்ற 22ம் தேதி டெல்லி செல்ல உள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 18 Nov 2018, 4:32 pm
கஜா புயல் தொடா்பாக முதல்கட்ட அறிக்கையை சமா்ப்பிப்பதற்காக முதல்வா் பழனிசாமி வருகின்ற 22ம் தேதி டெல்லி செல்லவுள்ளாா்.
Samayam Tamil CM Palaniswami.


தமிழகத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய கஜா புயலில் சிக்கி தமிழகத்தில் தற்போது வரை 45 போ் உயிாிழந்திருப்பதாக தமிழக முதல்வா் பழனிசாமி தொிவித்துள்ளாா். உயிாிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும் ஆடு, மாடு, வீடுகளை இழந்தவா்களுக்கும் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புயல் பாதிப்புகள் குறித்து மத்திய அரசுக்கு தொிவிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு சாா்பில் தொிவிக்கப்பட்டது. மேலும் வருகின்ற 22ம் தேதி புயல் பாதிப்பு குறித்து முதல்கட்ட அறிக்கை சமா்ப்பிக்க முதல்வா் பழனிசாமி டெல்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லி பயணத்தின் போது பிரதமா் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து நிவாரணத் தொகை கோரவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த செய்தி