ஆப்நகரம்

மெட்ரோ பணியாளர்களுக்கு டெங்கு சிறப்பு மருத்துவ முகாம்!

சென்னை: சென்னை மெட்ரோ பணியாளர்களை டெங்குவில் இருந்து பாதுகாக்க சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.

Samayam Tamil 27 Oct 2018, 1:37 am
சென்னை மெட்ரோ ரயில் சேவையில் கிட்டத்தட்ட 5000க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர். தற்போது தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் உட்பட பல காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இதில் இருந்து மெட்ரோ பணியாளர்களை பாதுகாக்க, சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.
Samayam Tamil 4


கட்டுமான பணியாளர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது. தவிர, பள்ளங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றும் பணிகளும் நடக்கிறது. மருந்து அடிக்கும் பணிகள், வீணான உணவுப்பொருட்களை அகற்கும் பணியிலும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக, சீரான இடைவேளையில், ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி