ஆப்நகரம்

புதிய புயல்! கடலோர பகுதிகளை கலங்கடிக்கும்!

அந்தமான் பகுதியில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் கடலோரப் பகுதிகளில் கனமழை கொட்டப்போவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 10 Nov 2017, 10:39 am
அந்தமான் பகுதியில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் கடலோரப் பகுதிகளில் கனமழை கொட்டப்போவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil coastal districts of tamil nadu and puducherry to get heavy rainfall
புதிய புயல்! கடலோர பகுதிகளை கலங்கடிக்கும்!


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த மழையில் ஈரம் காய்வதறகுள் அந்தமான் பகுதியில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

இதனால், இன்று முதல் திங்கட்கிழமை வரை (நவம்பர் 10 முதல் 13 வரை) கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், சென்னையில் ஒரு சில முறையும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அடுத்த செய்தி