ஆப்நகரம்

கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.

TOI Contributor 25 Dec 2017, 6:53 am
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.
Samayam Tamil coastal districts of tamilnadu will be rained in today weather
கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்


சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாாி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது, கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஒருசில கடலோர பகுதிகள் மற்றும் புதுச்சோியின் ஒருசில பகுதிகளில் லேசான மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தின் உள்மாவட்டங்களை பொறுத்தளவில், வறண்ட வானிலையே காணப்படும். சென்னையில் ஓரளவு மேகமூட்டம் காணப்படும். ஒருசில பகுதியில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும். இதன் காரணமாக தமிழகத்திற்கு மழை கிடைக்குமா என்பது குறித்து இப்போது எதுவும் குறிப்பிட முடியாது என்று ஆய்வு மைய இயக்குனா் தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி