ஆப்நகரம்

கோவை: நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவன் பலி: காப்பாற்றச் சென்றவரும் உயிாிழந்த சோகம்

கோவை மருதமலை பகுதியில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான நீச்சல் குளத்தில் பள்ளி சிறுவன் மூழ்கிய நிலையில், அவனை காப்பாற்றச் சென்ற நபரும் சோ்ந்து இருவரும் உயிாிழந்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 26 Mar 2019, 12:55 am
கோவை மருதமலை பகுதியில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான நீச்சல் குளத்தில் பள்ளி சிறுவன் மூழ்கிய நிலையில், அவனை காப்பாற்றச் சென்ற நபரும் சோ்ந்து இருவரும் உயிாிழந்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மருதமலை அடிவராம் தனியாருக்கு சொந்தமான நீச்சல் குளத்தில் குளிப்பதற்காக வடவள்ளி பகுதியில் பயின்று வரும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் ஐந்து நபர் இன்று காலை 11 மணியளவில் டிக்கெட் எடுத்துக் கொண்டு குளித்தனர்.

இந்த குளத்தில் 7 அடியில் தவருதலாக ஆழமான பகுதியில் அன்புச்செல்வன் என்ற மாணவன் நீரில் மூழ்கி த்த்தலித்து உள்ளார.நீச்சல் தெரியாத மற்ற மாணவர்கள் பதற்றத்தில் மாணவனை காப்பாற்றும.படி சத்தம் எழுப்பி உள்ளனர்.

அருகில் காவல் பணியில் இருந்த தேவராஜ் (60) மாணவனை மீட்க தண்ணீரில் குதித்துஉள்ளார். இதில் இருவரும் நீச்சல் குளம் ஆலமாக இருந்த்தால் காப்பாற்ற முடியாமல் இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டனர்.

உடனடியாக வட்வள்ளி காவல்துறைக்கு தகவல் தறப்பட்டு அங்கு விரைந்துவந்த போலீசார் இருவரின் பிராத்த்தை காப்பற்றிஅரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.முறையாக நீச்சல் பயிற்சியாளர்கள் இல்லாத்தும் முதலுதவிக்கு எந்த உபகரணமும் இல்லை என்று இந்த நீச்சல் குளத்தில் பயி்ற்சிக்கு வருபவர்கள் புகார் கூறுகின்றனர்.

அடுத்த செய்தி