ஆப்நகரம்

கோவையில் நீதிமன்றத்தை புறக்கணித்து, வழக்கறிஞர்கள் திடீர் போராட்டம்!

உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

TNN 3 Jan 2018, 11:15 pm
கோவை: உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
Samayam Tamil coimbatore advocates boycott courts
கோவையில் நீதிமன்றத்தை புறக்கணித்து, வழக்கறிஞர்கள் திடீர் போராட்டம்!


நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்யும் போது, அதனோடு ஒரு கடிதம் ஒன்றையும் இணைத்து வழக்கறிஞர்கள் சமர்பிப்பர்.

இந்த நடைமுறையில் கடந்த ஆண்டு நவம்பரில் சென்னை உயர்நீதிமன்றம் மாற்றம் கொண்டு வந்தது. அதாவது, மனு தாக்கலின் போது, வழக்கறிஞர்களின் புகைப்படங்களும், அடையாள அட்டை பிரதியும் இணைக்க வேண்டும்.

ஆனால் எப்போதும் புகைப்படங்களும் இருக்க முடியாது என்று கூறி, வழக்கறிஞர்கள் அதை எதிர்த்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 30ஆம் தேதி, மற்றொரு உத்தரவை பிறப்பித்தது.

அதில், மனுவுடன் வழக்கறிஞரின் அடையாள பிரதி மற்றும் மற்றொரு வழக்கறிஞரின் கையொப்பமிட்ட ஒப்புதல் சான்றும் இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதுவும் கூடுதல் சுமை என்றும், அடையாள பிரதியை இணைக்க முடியாது என்றும் வலியுறுத்தினர். இந்நிலையில் கோவையில் 3,000க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இதையடுத்து உயர்நீதிமன்றம் தனது உத்தரவிற்கு, இடைக்கால தடை விதித்தது.

இந்த சூழலில் நாளை(வியாழன்) நடைபெறும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தி, போராட்டத்தை கைவிடுவது குறித்து முடிவு செய்யப்படும் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Coimbatore advocates boycott courts.

அடுத்த செய்தி