ஆப்நகரம்

கோவை மக்களை மட்டும் கைவிடாத அதிமுக, ஸ்பெஷல் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் கோவை மக்களுக்கு மட்டும் அரசு தனி அக்கரை செய்துள்ளது...

Samayam Tamil 1 Jun 2020, 6:33 pm
தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போதிருந்து மாநிலத்தில் ஏழ்மை நிலை மக்கள் உணவுக்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதல்வர் பழனிசாமி சேலம் மாவட்டத்தில் மட்டும் உள்ள அம்மா உணவகங்களில் கட்டணமில்லா உணவு வழங்க வழி வகை செய்திருந்தார். அதன்படி சேலம் மாவட்டத்தில் அம்மா உணவகங்களில் விற்கப்படும் உணவுகளுக்கு முதல்வர் பழனிசாமி செலவை ஏற்றுக் கொண்டார்.
Samayam Tamil கோவை மக்களை மட்டும் கைவிடாத அதிமுக, ஸ்பெஷல் அறிவிப்பு!
கோவை மக்களை மட்டும் கைவிடாத அதிமுக, ஸ்பெஷல் அறிவிப்பு!


முதல்வரின் இந்த செயலை தொடர்ந்து கோவையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் அதிமுக செலவை ஏற்றது. இதன் காரணமாக இப்போது ஊரடங்கு முடியும் வரை கோவையில் உள்ள அம்மா உணவகங்கள் வாடிக்கையாளர்களுக்குக் கட்டணமில்லாமல் உணவு வழங்கி வந்தது.

அரசுப் பேருந்துகளிலும் வந்துவிட்டது paytm!!

இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் மாநகராட்சி செலவை ஏற்றுக் கொண்டது. சென்னை மாநகராட்சியின் இந்த உத்தரவு சென்னைவாசிகள் பலருக்கு உதவிகரமாக இருந்தது. இந்த சூழலில், கோவையில் உள்ள மக்களை மட்டும் மனதில் கொண்டு அதிமுக சார்பாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

கோவை அம்மா உணவகங்கள் தொடர்பாக அமைச்சர் எஸ் பி வேலுமணி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
கோவை மாவட்டத்தில் உள்ள அம்மா உணவகங்களில் ஜூன் 30ம் தேதி வரை கட்டணமில்லாத உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் ஜூன் மாதத்துக்கு அம்மா உணவகத்தில் தயார் செய்யப்படும் உணவுக்கான தொகை ரூ.87 லட்சம் கோவை மாவட்ட ஆட்சியர் ராஜா மணியிடம் வழங்கப்பட்டுவிட்டது. இதை மக்கள் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி