ஆப்நகரம்

திராவிட விடுதலை கழக பிரமுகர் பரூக் கொலை வழக்கில் மேலும் இருவர் சரண்!

திராவிட விடுதலை கழக பிரமுகர் பரூக் கொலை வழக்கில் மேலும் இருவர் சரண்!

TNN 20 Mar 2017, 9:06 pm
கோவை : திராவிடர் விடுதலை கழக பிரமுகர் பரூக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவர் சரணடைந்துள்ளனர்.
Samayam Tamil coimbatore atheist murder two more surrender
திராவிட விடுதலை கழக பிரமுகர் பரூக் கொலை வழக்கில் மேலும் இருவர் சரண்!


மார்ச் 16ஆம் தேதி பரூக்கிற்கு தொலைபேசி அழைப்பு வந்ததை அடுத்து அவர் வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் அன்று இரவு பரூக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். ஆறு பேர் சேர்ந்த கும்பல் பரூக்கை கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகித்தனர். நாத்திகரான பரூக் வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் கடவுள் மறுப்பு கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார். பரூக் இஸ்லாம் மதத்திற்கு எதிராக கருத்து தெரிவித்தது பலருக்கும் கோபத்தை உண்டாக்கியுள்ளது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர்.

கொலை தொடர்பாக இன்று (20.03.17) போத்தனூரை சேர்ந்த சதாம் ஹூசைன் மற்றும் சம்சுதீன் இருவரும் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். இது வரை கொலை தொடர்பாக 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். மேலும் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சதாம் ஹூசைன் மற்றும் சம்சுதீன் இருவரையும் ஏப்ரல் 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஹூசைனுக்கும் இந்த கொலைக்கும் தொடர்பில்லை என்று அவரது வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார். ஆனால் சதாம் ஹூசைன் மற்றும் சம்சுதீன் மீது கொலை வழக்கு நிலுவையில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு வெடிகுண்டு வழக்கில் தொடர்புடைய கிசன் புகாரியின் உறவினர் ஹூசைன் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் சம்சுதீனுக்கும் ஹித்துத்வா ஆர்வலர்கள் மீது பெட்ரோல் பாம் வீசிய வழக்கிற்கும் தொடர்பு உள்ளது. இருவரையும் மார்ச் 17ஆம் தேதிமுதல் காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஆனால் காவல்துறையினர் கைது செய்வதற்கு முன் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். மார்ச் 17ஆம் தேதி போத்தனூரை சேர்ந்த அன்சத் (30) என்பவர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அக்ரம் (30), முனாஃப் (38) இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஜாஃபர் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி