ஆப்நகரம்

கோவையில் வீடு கேட்கும் முடி திருத்தும் தொழிலாளர்கள்

வாடகைக்கு எளிதில் வீடு கிடைப்பதில்லை என்பதால் முடி திருத்தும் தொழிலாளர்கள் வீடு அல்லது பட்டா மனை கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

TNN 25 Jul 2016, 7:05 pm
கோவை : வாடகைக்கு எளிதில் வீடு கிடைப்பதில்லை என்பதால் முடி திருத்தும் தொழிலாளர்கள் வீடு அல்லது பட்டா மனை கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். முடி திருத்தும் தொழிலாளியான சிவானந்தம் கடந்த ஆறு மாதங்களாக ஆர்.எஸ்.புரம், வீரகேரளம் பகுதிகளில் வாடகைக்கு வீடு தேடி வருவதாகவும், ஆனால் கிடைக்கவில்லை என்கிறார். இந்த தொழில் செய்வதால் எவரும் வீடு வாடகைக்கு விட முன் வருவதில்லை என்றும் வருத்தம் தெரிவிக்கிறார். எல்லா தொழிலாளர்களுக்கும் இதே போன்ற இருப்பதாக கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 1000 பேர் சேர்ந்து மனு கொடுத்துள்ளனர்.
Samayam Tamil coimbatore barbers demanding for house
கோவையில் வீடு கேட்கும் முடி திருத்தும் தொழிலாளர்கள்


நகரத்திற்கு அருகாமையில் தங்களுக்கென இடம் ஒதுக்க வேண்டும் என்று இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முடி திருத்தும் தொழிலை நம்பியே தங்களின் பிழைப்பு இருப்பதாகவும், தற்போது உயர்ரக சலூன்கள் வருவதால் தங்களின் தொழில் மேலும் நலிவடைந்து வருவதாகவும் கூறியுள்ளனர். நகரத்திற்கு அருகில் எந்த பகுதியிலாவது தங்களுக்கு வீட்டு மனை ஒதுக்க வேண்டும் என்று 1000 மனுக்களை ஆட்சியரிடம் அளித்துள்ளனர்.

அடுத்த செய்தி