ஆப்நகரம்

சிறையில் விசாரணைக் கைதி அடித்து கொலை: இரண்டு வார்டன்கள் சஸ்பெண்ட்!

கோவை சிறையில் விசாரணைக் கைதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறை வார்டன்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 6 Jun 2018, 11:05 am
கோவை சிறையில் விசாரணைக் கைதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறை வார்டன்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
Samayam Tamil 06cbprison1
சிறையில் விசாரணைக் கைதி அடித்து கொலை: இரண்டு வார்டன்கள் சஸ்பெண்ட்!


கோவை பீளமேடு ஹட்கோ காலனியைச் சேர்ந்த ரமேஷ்(45) என்பவர் கடந்த 2 மாதங்களுக்கு முன் அடிதடி வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதேபோல், பேரூரைச் சேர்ந்த விஜய்(19), அப்பகுதியில் மே 25-ம் தேதி நடைபெற்ற அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்த இருவரும் சிறையில் உள்ள மருத்துவரிடம் மனநல ஆலோசனை பெற்று வந்தனர்.

ஒரே அறையில் தங்கியிருந்தபோதும், இவர்களுக்கிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று மதியம் இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. அப்போது, விஜய் கல்லால் தாக்கியதில், ரமேஷ் படுகாயமடைந்துள்ளார்.

தலையில் படுகாயமடைந்து, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மீட்ட காவல்துறையினர், கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், ரமேஷ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கொலைச் சம்பவம் தொடர்பாக சிறை வார்டன்கள் முனுசாமி, கருப்பசாமி ஆகிய இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி